8/7/13

சாதி ஆதிக்க எதிர்ப்பும்,தமிழ்த் தேசியவிடுதலையும்.

  அன்பு மிகு என்  தமிழ் சமூகமே.!

 இளவரசன்-திவ்யா காதல் வாழ்வு தமிழ் சமூக வாழ்வின்

அழியா ஒவியமாகவும், காவியமாகவும் மாறிவிட்டது!

இந்தப் பின்னனியில் தமிழ் சமூகம் கடக்க வேண்டிய தடத்தை

நாம் மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.


கீழ்தஞ்சை மாவட்டத்தில் நிலவிய மிகப்பெரிய சாத்தீய நிலவுடமைக்

கட்டமைப்பை எதிர்த்து மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டியவர்

தோழர் சீனிவாசராவ் .இவர் பிறப்பால் கன்னட பிராமணர்.

வாட்டாக்குடி இரணியன் கள்ளர் சாதியிலிருந்து வந்த பெரும் தளபதி

சாதீய நிலவுடமை ஆதிக்கப்போரில் பலியானவர்.

இந்தப் பின்னனியில் இன்றும் ஒருதத்துவத்தின் வழிப்பட்ட அரசியல்

இல்லாமல் இன்றைய நிலமைகளை எதிர்கொள்ள முடியாது!

பின் நவீனத்துவம் என்ற பெயரில் 90களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட

மார்க்சியத்திற்கு எதிரான தாக்குதலுக்கு தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து

வந்த அறிவாளர்களும் பலியானார்கள்

தலித்தலமை என்று பேசி பாராளுமன்ற அரசியலுக்கு பாதை அமைத்துக்

கொண்டனர். கீழ்வெண்மணிக்கு பக்கத்துணை நின்ற மூப்பனாரோடு

திருமாவளவனும்,கிருக்ஷ்ணசாமியும மாறி,மாறி கூட்டணிபோட்டனர்.

அவர்கள் மட்டுமல்ல சீனிவாசராவின் பெயரச்சொல்லும் இரண்டு

கம்யூனிஸ்டுகளும் கூட்டுப்போட்டனர்.

வெட்கமில்லாமல் மன்றாடியாருக்கும்,வாண்டையாருக்கும்

ஓட்டுக்கேட்டு வீதியில் சிவப்புக்கொடிபிடித்து வந்தனர்.

இப்படியான சிக்கல் ஒருபக்கம் இருந்தபோது

தமிழ் சமூகத்தின் சாதீய நிலவுடமை குறித்தும்,தேசிய இனச்

சிக்கல் குறித்தான போராட்டத்தில் மார்க்சிய வழிப்பட்ட ஒரு
அரசியலை முன்வைக்கும் போராட்டத்தில் மா-லெ குழுவினர்

இருந்தனர்.

இன்று நாம் ஒரு மிகப்பெரிய பின்னடைவுக்கு ஆளாகியுள்ளதை

தன்னாய்வுடன் தொகுத்து புரிந்துகொண்டு செயல்படவேண்டியுள்ளது.

பெரியார்,அம்பேத்கர் குறித்தான புரிதல் இல்லாமலும்

பார்ப்பனியத்திற்கும் இந்திய நிலவுடமைக்கும் உள்ள உறவு,

பார்ப்பனியத்திற்கும் தேசிய இனஒடுக்குமுறைக்கும் உள்ள உறவு

குறித்தபுரிதலோடு நாம் களம் அமைப்போம்!

பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள ஆதிக்க வாதிகளின் நஉலனைக்காக்க

ராமதாசும்,கொங்கு அமைப்புகளும் இன்னிபிற பிற்படுதப்பட்டசாதியினரும் உழைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களை தம்பக்கம் திரட்டுகின்றனர்.

அதற்கு இயல்பான வளர்ச்சிப்போக்கில் நடக்கும் காதல் திருமணத்தை

மொத்த சமூகத்தின் பிரச்சனையாகக் காட்டி இழிவான அணிதிரட்டலை

செய்கின்றனர்.

அனைத்து மக்களையும் பாதிக்கும் பல்வேறு பிரச்சனகளை பின்தள்ளிவிட்டு மக்களை திசைதிருப்புகின்றனர்.

நாம் தமிழ்தேசிய அரசியலை உழைக்கும் மக்களை பின்புலாமாகக்

கொண்டு கட்டமைத்து முறியடிப்போம்!

இளவரசன் இன்னுயிர் தந்து ராமதாசு கும்பலின்

சாதி ஆதிக்கவெறிக்கு மரண அடிகொடுத்துள்ளார்.

இன்னும் ஆயிரமாயிரம் இளவரசன் களை

உருவாக்குவோம் சாதீய விடுதலைப் போராட்டத்தை

உறுதியுடன் முன்னெடுப்போம்!


கருத்துகள் இல்லை: