25/3/13

ஒற்றைப்பார்வை

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுக்க பரவியிருக்கும் மாணவ எழுச்சியைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பாலசந்திரனின் ஒற்றைப்பார்வை உண்டு பண்ணிய அதிர்வே இந்த மாணவர்களின் எழுச்சி.

மாணவ சக்தியைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கையோடு மாணவர்களின் அரசியல் ஈடுபாட்டை சங்கறுத்த திராவிட ஓட்டுப் பொறுக்கிகளின் சதித்திட்டத்தையும் சேர்த்து தகர்த்தெறிந்திருக்கிறான் பாலசந்திரன்.

பொதுவாகவே இன்றைய மாணவர்கள் சமூகப் பிரச்னையில் ஆர்வமற்றவர்கள் என்ற பலரின் மனநிலையை தகர்த்தெறிந்திருக்கிறார்கள்.

அதே சமயம் உண்ணாவிரதப்போராட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை. மானங்கெட்ட ஜனநாயக மன்னர்கள் இப்போது ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் என்பதால் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு இவர்களிடத்தில் துளியும் மதிப்பிருக்காது. வேறுவடிவிலான போராட்டத்தை தொடருங்கள்.

போதும் தமிழர்கள் தங்களைத் தாங்களே வருத்திக்கொண்டது.. இனிமேல் நம்மை ஏய்த்தவர்களுக்கு வலிக்க வேண்டும்.. அதற்கேற்ற போராட்டத்தை ஆரம்பிப்போம். கூடவே துரோகிகள் யார்.. எதிரிகள் யார் என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள்.

வீதிக்கு வந்து போராடும் உங்களின் ஆர்வத்திற்கு நன்றி மாணவ நண்பர்களே.. உங்களில் ஓராயிரம் பாலசந்திரன்களை காண்கிறேன்..

(தமிழகம் தழுவிய மாணவர்களின் போராட்டச் செய்திகளை ஒரே பக்கத்தில் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு பக்கத்தை நண்பர்கள் உருவாக்கினால் செய்திகளை பரவலாக கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.)
 
 நன்றி-Cartoonist Bala

கருத்துகள் இல்லை: